திண்டுக்கல், அக். 16: குடிநீர் குழாய் உடைப்பு குறித்து வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால் நீர் விரயமாகி ரோடும் பெயர்ந்து கிடக்கிறது என்று குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. சிலுவத்தூர் ரோடு ரயில்வே மேம்பாலப்பணி காரணமாக அப்பகுதி போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே இலகுரக வாகனங்கள் மட்டும் திருநகர், மாசிலாமணிபுரம், பாலகிருஷ்ணாபுரம் வழியாக சென்று வருகின்றன. திருநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ரோடு பெயர்ந்து கிடக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது எனக்கூறி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கோவிந்தராஜன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தார்.