×

மகளை காதலித்த வாலிபருக்கு கத்திக்குத்து: தந்தை கைது

கொடுங்கையூர், அக்.15: சென்னை கொருக்குப்பேட்டை எழில்நகரை சேர்ந்தவர் ராஜி (49). இவர்களது மகள் ராதிகா (20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்தவர் தர் (24). இவரும், ராதிகாவும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தர் வீட்டுக்கு ராதிகாவின் தாய் ஆனந்தி சென்றார். அங்கு தனது மகளுடன் பேச கூடாது என கூறி தகராறு செய்துள்ளார். மேலும், தரின் செல்போனை பறித்து கொண்டு சென்றுவிட்டார். இதைதொடர்ந்து தர், நேற்று முன்தினம் இரவு தனது செல்போனை வாங்குவதற்காக, ராதிகா வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது தந்தை ராஜிக்கும், தருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜி, வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்து, தரை சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், தலைமறைவாக இருந்த ராஜியை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...