×

எழும்பூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

சென்னை, அக். 16: எழும்பூரில் பாந்தியான் சாலையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு தங்களது இல்லங்களில் தயாரிப்பது போன்று தரமானதாகவும், சுகாதாரமான முறையில் சுவையாகவும் பணியாளர்கள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், செயல்பாடு மற்றும் உணவு பொருட்களின் தரம் ஆகியவற்றில் ஏதேனும் சிறு குறைகள் கண்டறியப்பட்டாலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் (பொ) லலிதா, துணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, மாநகர நல அலுவலர்,செந்தில்நாதன், மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : SB Vellumani ,Egmore Mommy Restaurant ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும்...