×

அத்திப்பட்டு குப்பை கிடங்கு திட்டம் கைவிடப்பட்டது

சென்னை, அக். 16: பள்ளிக்கரணை அருகில் உள்ள அத்திப்பட்டில் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 5400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிப்படுகின்றன. இந்தப் குப்பைகள்  அனைத்து கொடுங்கையூரில் மற்றும் பெருங்குடியில் உள்ள கிடங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் பள்ளிக்கரணையில் அருகே உள்ள அத்திப்பட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், நிர்வாக  காரணங்களுக்காக இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...