மணலி, அக். 16: மணலி அருகே தீயம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் இலவச மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. சீரடி சாயி பவுண்டேஷன் தலைவர் டாக்டர் துரை அருள்நேயம் தலைமை தாங்கினார். சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் ஜெயந்தி தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு நுரையீரல், இருதயம், பல், நரம்பு, பொது மருத்துவம் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில், 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சிகிச்சையளிக்கபட்டது.