×

மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ4.19 லட்சம் காணிக்கை வசூல்

தாரமங்கலம், அக்.12: தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில், ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்படும். அதன்படி நேற்று, கோயிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் செயல் அலுவலர், உதவி ஆணையர், தக்கார், சேலம்  உதவி ஆணையர், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் கோயில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், வங்கி அலுவலர்கள் காணிக்கையை எண்ணினர். அதில், ரூ4 லட்சத்து 19,598 ரொக்கம், தங்கம் 110 கிராம், வெள்ளி 336 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

Tags : Mariamman temple ,
× RELATED புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்