சேலம், அக்.12: உலக கண் பார்வை தினத்தையொட்டி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்திற்குட்பட்ட ‘அலைடு ஹெல்த் சயின்ஸ்’ துறையின் சார்பில் பேரணி நேற்று நடந்தது. பேரணியை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதிர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் மாநகர ேபாலீஸ் கமிஷனர் சங்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை தலைவர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணி நாட்டாண்மை கட்டிடத்தில் தொடங்கி, பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா வழியாக காந்தி ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது.