இடைப்பாடி, அக். 12: இடைப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், வட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். வட்டத்தலைவர் சங்கர், மாவட்ட இணைச்செயலாளர் குப்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக இடைப்பாடி வட்டாரத்தில் வீட்டு வாடகைப்படி 2பி யில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பெற்று வந்தனர். இந்நிலையில் தற்ேபாது வீட்டு வாடகை படி கிரேடு 3ல் கணக்கிட்டு, கடந்த 1.10.2017 முதல் குறைத்து வழங்கி வருகின்றனர். இதுகுறித்து கருவூலத்துறை அதிகாரியை பல முறை நேரில் சந்தித்து கேட்ட ேபாதிலும்,