பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தாத பாஜ அரசை கண்டித்து காங்கிரசார் பிரசாரம்

சேலம், அக்.12: சேலம் கருங்கல்பட்டியில் ெபட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத பாஜ அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர். சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், கருங்கல்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத பாஜ அரசை கண்டித்து பிரசார கூட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகுராஜன் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் கமலக்கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு மாநில தலைவர் மோகன்குமாரமங்கலம்,

துணைத்தலைவர் ஆனந்த் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினர். அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய பாஜ அரசு தவறிவிட்டது. இதனால், மக்கள் கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். ரபேல் போர் விமான கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல முரண்பாடுகள் இருக்கிறது என பிரசாரம் செய்தனர். இதில், நிர்வாகிகள் வக்கீல் கார்த்தி, வெங்கட்ராஜ், லட்சுமண பெருமாள், கேசவன், பூபாலன், ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: