×

கொல்லிமலையில் பெண்ணை தாக்கிய விவசாயி கைது

சேந்தமங்கலம், அக்.12: கொல்லிமலை வளப்பூர்நாடு ஓடக்காடுபட்டியைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார்(42). இவரது மனைவி சிந்தாமணி(28). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெரியசாமி (42) என்பவருக்கும், இவர்களுக்கும் இடையே, வழித்தடம் குறித்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி, தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பிரச்னைக்குரிய வழித்தடத்தில், சிந்தாமணி விறகுகளை போட்டு வைத்திருந்தார். இதை பெரியசாமி குடும்பத்தினர் கேட்ட போது, இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது சிந்தாமணியை, பெரியசாமி இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வாழவந்தி போலீசார், பெரியசாமியை கைது செய்தனர். 

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா