×

நகை திருடிய சிறுவன் கைது

பரமத்திவேலூர், அக்.12: பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலையை சேர்ந்தவர் முத்துசாமி (57). ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் குடும்பத்துடன் கடந்த 5ம் தேதி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய முத்துசாமி, வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.  மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தோடு ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர், ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 19 வயது சிறுவனை பிடித்து விசாரித்ததில் பொத்தனூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் கபிலர்மலையில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 4 பவுன் நகையை மீட்டு பரமத்தி சிறார் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்