×

அரசலாற்றில் மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல்

பாபநாசம், அக். 12: பாபநாசம் அருகே அரசலாற் றில் இருந்து மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்து. மேலும் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் படுகை பகுதியில் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் தர்மராஜ், கபிஸ்தலம் ஆர்ஐ ஜெயமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்குமார், சிவப்பிரகாசம், சதீஸ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற லாரியை மறித்து சோதனை நடத்தினர். அதில் அரசலாற்றிலிருந்து அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் வருவாய் துறையினர் ஒப்படைத்தனர். கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : palace ,
× RELATED எனக்கு புற்றுநோய் உள்ளது… வீடியோ வெளியிட்ட பிரிட்டன் இளவரசி