தஞ்சையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி

தஞ்சை, அக். 12: தஞ்சை கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் பள்ளி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாமன்னன் ராஜராஜசோழன் ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளை, ராபின்சன் ஜூனியர் கூடைப்பந்து கிளப் சார்பில் 6வது அகில இந்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நாளை துவங்கி 4 நாட்கள் நடக்கிறது. இதில் தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, அரியானா மாநிலம் மற்றும் கரூர், சென்னை, நாகர்கோவில், சேலம் மற்றும் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பிரிவில் 12 அணி பங்கேற்கிறது. இதேபோல் மகளிர்  பிரிவில் 12 அணிகள் பங்கேற்கிறது. போட்டிகளை கலெக்டர் அண்ணாதுரை துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர்  இளவரசு, நிறுவனரும் சர்வதேச கூடைப்பந்து நடுவரான துரைராஜ், ரமேஷ்குமார் செய்து வருகின்றனர்.

Related Stories: