கும்பகோணம், அக். 12: கும்ப கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு சோலையப்பன் தெரு விரிவாக்கம் விஸ்வநாதர் காலனியில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு வாரத்தில் சில நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் இருந்தும் ஒரு மின்கம்பத்தில் மட்டுமே லைட் எரிந்து வருகிறது. இதேபோல் தெருக்களில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் போதிய அடிப்படை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விஸ்வநாதர் காலனி மக்களுக்கு விரைந்து அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.