×

அரியலூர் மாவட்டத்தில் 1470 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

அரியலூர்,அக்,12:  இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, வரும் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணியானது. கடந்த 5.10.2018 முதல் 10.10.2018 முடிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், உரிய பாதுகாப்போடு, அரியலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற்றது.இப்பணியின் போது, அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1470 வாக்குப்பதிவு இயந்திரங்களையும், 800 கட்டுப்பாட்டு இயந்திரங்களையும், 800 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்களையும் சரிபார்க்கும் பணியினை, பெங்களூர், பாரத மின்னணு லிமிடெட்   நிறுவனத்தை சேர்ந்த 12 பொறியாளர்கள் மேற்கொண்டனர். இப்பணியின் நிறைவு நாளான நேற்று சரிபார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 5 சதவீத இயந்திரங்களை கொண்டு, அவர்களின் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. இம்மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வினை கலெக்டர்  விஜயலட்சுமி, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர், சத்தியநாராயணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்), சந்திரசேகரன் மற்றும் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...