×

விவசாய மண்டலமாக அறிவிக்க கோரிக்கை

சீர்காழி, அக்.12: சீர்காழியில் மார்க்சிஸ்ட்  (லெ) கட்சியின் மாநில ஊழியர் கூட்டம்   நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் மகா சபையின்   நிர்வாகி சந்திரமோகன், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜானகிராமன், குணசேகரன், அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலின் நிர்வாகி  நடராஜன்,  மத்திய குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாநில செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தனர். பிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக  விவசாயிகள் மகாசபையின் முதல் மாநில மாநாட்டை  கும்பகோணத்தில் அக்டோபர் 27ல் நடத்துவது, உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...