×

விசி கட்சி சாலை மறியல்

சீர்காழி,அக்,12: சீர்காழி அருகே சட்டநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே  விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பங்கள் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தினை சேதப்படுத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமையில் கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.  பின் அங்கு கொடிகம்பத்தை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவல்  அறிந்த   இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறயிலில்  ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்