×

நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்

கரூர், அக்.12: நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. நவராத்திரியையொட்டி கொலு பாம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொலு புதிதாக வீடுகளில் வைப்பவர்களும், வீடுகளில் ஏற்கனவே கொலு வைப்பவர்கள் கூடுதலாகவும் கொலு பொம்மைகளை வாங்கி வருகின்றனர். மண்ணால் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட கொலுபொம்மைகள் செட்டாகவும், தனியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கரூர் பசுதீசுவரர்கோயில் முன்புறம், கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Kollu ,festival ,Navratri ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...