×

லெக்டர் அறிவுறுத்தல் பசுபதிபாளையம் குகை வழிப்பாதைக்கு அணுகுசாலை அமைக்கும் பணி தாமதம்

கரூர்,அக்.12:  கரூர் பசுபதிபாளையம் குகை வழிப்பாதைக்கு அணுகுசாலை அமைக்கும் பணி தாமதமாகிறது. விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் பசுபதிபாளையத்தில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி ரயில்வே கேட்போடப்படுவதால் குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என வடக்கு பகுதியில் வாழும் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று குகைவழிப்பாதை அமைக்க மூன்று முறை பணி துவக்கவிழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரயில்வே துறையினர், அவர்கள் பகுதியான இருப்புப்பாதை பகுதியில் குகைவழிப்பாதையை அமைக்கும் வேலையை முடித்தனர். அடுத்த கட்டமாக சுற்றுச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட வேண்டும். பல மாதங்கள் ஆகியும் இந்த பணிகள் மந்தகதியிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல ரயில்வேகேட் போடப்படும் நேரங்களில் காத்திருந்து சென்று வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி செல்பவர்களும், வேலைக்கு சென்று வருவோரும் மிகவும் அவதிப்படுகின்றனர். ரயில்வே துறை பணிமுடிந்த நிலையில் மீதமுள்ள பணிகளான அணுகுசாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் வேலையை துரிதப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா