×

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

ஊட்டி,அக்.12: ஊட்டி அருேகயுள்ள ஆடாசோலை பகுதியில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து ெகான்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஊட்டி அருேகயுள்ள ஆடாசோலை பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அப்பாஸ்(45). இவரது மனைவி மொபினா(35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் கூலித் தொழிலாளி. அப்பாசிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் தம்பதியினர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஏற்பட்ட தகராறின் போது அப்பாஸ் மொபினாவை தாக்கி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த மொபினா மருத்துவனையில்  இறந்தார். இது தொடர்பாக, மொபினாவின் தந்தை உஸ்மான் அளித்த புகாரின் பேரில் புதுமந்து போலீசார் அப்பாஸை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி முரளிதரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மனைவியை எரித்து கொன்ற அப்பாசிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரமும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...