×

மஞ்சள் ஏலம் ரத்து

கோவை, அக்.12: கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த மஞ்சள் ஏலத்திற்கு வரத்து இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் திங்கள் மற்றும் வியாழன் தோறும் மஞ்சள் விற்பனை, ஏலம் முறையில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை மஞ்சள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால், மஞ்சள் வரத்து போதிய அளவு இல்லாததால், விற்பனை ரத்து செய்யப்பட்டது. இதே போல் கடந்த வாரங்களாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் தரப்பில் கூறுகையில், ‘விலை சரிவால் விவசாயிகள் மஞ்சளை கொண்டு வரவில்லை, என தெரிகிறது. அடுத்த ஏலம் வரும் 15ம் தேதி நடைபெறும். அன்று விவசாயிகள் மஞ்சளை போதிய அளவில் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.’ என்றனர்.

Tags : auction ,
× RELATED திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோயிலில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத விழா