×

சிறுமுகையில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

மேட்டுப்பாளையம், அக்.12: சிறுமுகையில் வீட்டின் பின்புறம் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அழகப்ப கவுண்டன்புதூரை சேர்ந்தவர்  பழனிசாமி (52), இவரது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவம் அருகே   சந்தன மரம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் பின்புறம் சத்தம் கேட்டு பழனிசாமி வந்து பார்த்த போது யாரும் இல்லை.

நேற்று காலை  மீண்டும் வந்து பார்த்தபோது அப்பகுதியில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது. பழனிசாமி இதுகுறித்து சிறுமுகை வனசரகர் மனோகரனிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர், சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர்களை பிடிக்க வனச்சரகர் மனோகரன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு அவர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்