×

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை

சத்தியமங்கலம், அக்.12. சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சியினர் என மொத்தம் 44 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி வேட்பு மனு பரிசீலனையின் போது அதிமுகவினரின் 11 வேட்பு மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், மீதியுள்ள மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் பட்டியல் ஒட்டினர்.

இதனை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, திமுகவினர் தேர்தலுக்கு தடை விதிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தலுக்கு தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : producers ,union elections ,
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...