ஈரோடு, அக். 12: சேலம் மாவட்டம் புத்துமாரியம்மன் கோவில் கோபால் செட்டி தெருவை சேர்ந்த வேட்ராயன் மகன் சரணவன்(26). ஜேசிபி டிரைவர். இவர் வேலை காரணமாக நேற்று சேலத்திலிருந்து ரயில் மூலம் ஈரோட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவர் ரயில் பெட்டியில் துாங்கிவிட்டார். இவர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது விழித்து பார்த்தபோது கையில் இருந்த செல்போன் மாயமாகி இருந்தது. சரவணன் பயணித்த பெட்டியில், அவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்த மர்ம நபர் தான் செல்போன் திருடி சென்றது தெரியவந்தது.