×

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர்,அக்.12:  விருதுநகர் கலெக்டர் கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் அக்.16ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர்களிடம் நேரில் அளித்து பயன்பெறலாம். கடந்த மாதம் வழங்கிய மனுவிற்கான பதில்களும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்