×

கீழே தவறி விழுந்த லாரி டிரைவர் சாவு

காரைக்குடி, அக்.12: காரைக்குடி அருகே சிறுநீர் கழிக்கச் சென்ற லாரி டிரைவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் வீரசேகரபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் தர்மர்( 37). லாரி டிரைவர். இவர் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் முத்துராஜா அரிசி ஆலை எதிரே நேற்று லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது சுயநினைவின்றி கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தர்மரின் அண்ணன் சகாதேவன் கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Death ,Larry Driver ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...