×

நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

விருதுநகர், அக்.12: ரேஷன் விநியோக குறைகளை தீர்க்கும் வகையில் அக்.13ம் தேதி முகாம் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட வழங்கல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரேஷன் விநியோக குறைகளை தீர்க்கும் வகையில் அக்.13ம் தேதி கீழ்கண்ட பகுதிகளில் ரேஷன் விநியோக குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. திருவில்லிபுத்தூர் சுந்தரபாண்டியம் ஊராட்சி, ராஜபாளையம் கிழவிகுளம் ஊராட்சி, சிவகாசி எஸ்.புதுப்பட்டி ஊராட்சி, சாத்தூர் பெத்துரெட்டிபட்டி ஊராட்சி, விருதுநகர் கோட்டநத்தம் ஊராட்சி,

அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டி ஊராட்சி, காரியாபட்டி குரண்டி ஊராட்சி, திருச்சுழி பி.புதுப்பட்டி ஊராட்சி, வெம்பக்கோட்டை திருவேங்கிடபுரம் ஊராட்சி பகுதிகளில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. குறைதீர்க்கும் கூட்டத்தில் கார்டுதாரர்கள் பங்கேற்று ரேஷன் விநியோகம் தொடர்பாக குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ஆதார் மற்றும் கைபேசி எண் பதிவு செய்தல் போன்ற மனுக்களை அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்