மேலூர், அக். 12: மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தய ஆர்வலர்கள் நடத்திய இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்து சென்றது.
மேலூர் அருகே முசுண்டகிரிபட்டியில் மாட்டு வண்டி பந்தய ஆர்வலர்கள் நடத்திய மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலூர் கத்தப்பட்டி அருகே முசுண்டகிரிபட்டியில் இருந்து இடையப்பட்டி வரையிலான சாலையில் போட்டிகள் நடைபெற்றது. 12 கிமீ. எல்லையாக கொண்ட பெரிய மாடுகள் பிரிவில் மொத்தம் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.