திண்டுக்கல், அக். 12: திண்டுக்கல்லில் நூறு கிலோ கேரிபேக்குகள் கைப்பற்றப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். மாநகர சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், லாவண்யா, காமராஜ் உள்ளிட்டோர் இச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கேரிபைகள் கைப்பற்றப்பட்டன. ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.