பழநி, அக். 12: பழநி உழவர் சந்தை ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் புதுமண தம்பதிகளுக்கான பணியரங்கம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மதினா பேகம் முன்னிலை வகித்தார். புதுமண தம்பதிகளுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜேஸ்வரி மற்றும் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.