புதுமண தம்பதிகளுக்கான பணியரங்கம்

பழநி, அக். 12: பழநி உழவர் சந்தை ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் புதுமண தம்பதிகளுக்கான பணியரங்கம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மதினா பேகம் முன்னிலை வகித்தார். புதுமண தம்பதிகளுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜேஸ்வரி மற்றும் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

புதுமண தம்பதிகள் குழந்தைபேறு அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு முறைகள் குறித்தும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் விளக்கமளித்தார். தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இதில் பழநி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: