×

அரசு நிறைய செய்தாலும் குறைகள் அதிகம்

புதுச்சேரி, அக். 12: சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியது:
கடந்த  அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது. ஆனால் கடன் வாங்க எங்கள் அரசுக்கு   தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசு வாங்கிய கடன்களை அடைக்கும் பொறுப்பு   எங்களுக்கு உள்ளது. குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.1300 கோடி என கடனை திருப்பி   அடைக்க வேண்டியுள்ளது. தற்போது அவர்களே ஆட்சியில் இருந்தாலும் எதுவும்   செய்ய முடியாது.
 கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மாநிலத்தை முன்னேற்ற   நினைக்கின்றனர். ஆனால் நிதி இல்லை. அனைவரும் இலவசத்தை எதிர்பார்க்கின்றனர்.   வசதி படைத்தவர்களும் சென்டாக் நிதியுதவி வேண்டும் என்று நினைக்கின்றனர்.   கடந்த அரசு செய்த தவறுகளால் பல திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.  அரசு   சார்பு நிறுவன ஊழியர்களின் சம்பளம் பிரச்னையை தீர்க்க கவர்னரும்,   முதல்வரும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு வருமானம்   வருவதற்கு வழி செய்ய வேண்டும். புதுவை அரசு நிறைய செய்கிறது. இருப்பினும்,   குறைகள் அதிகம் உள்ளது என்றார்.

Tags : government ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்