குளத்தூர்,அக்.11: வேப்பலோடை அரசு பள்ளி மாணவர்களுக்கு அன்னைதெரசா சங்கத்தினர் தினகரன் நாளிதழ் வினா-விடை வழங்கினர்.குளத்தூரையடுத்த வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்கத்தின் சார்பில் தினகரன் நாளிதழ் வினா-விடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். சகாயமாதா சால்ட் பொதுமேலாளர் தேன்ராஜ், ராஜபாண்டி, அன்னை தெரசா கிராமபொது நலச்சங்க தலைவர் முனியசாமி, பொருளாளர் முத்துகிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்க செயலாளர் ஜேம்ஸ்அமிர்தராஜ் பேசுகையில், ‘வாரந்தோறும் புதன்கிழமை தினகரன் நாளிதழில் வரும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு தேர்வுக்குரிய வினா-விடை அன்னை தெரசா சங்கத்தின் சார்பில் தொடர்ந்து 5மாதங்களுக்கு வழங்கப்படும். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என்றார். உதவி தலைமை ஆசிரியை புளோரிடா நன்றி கூறினார்.