×

கோயில் கொடை விழாவில் பரிசளிப்பு

உடன்குடி,அக்.11: உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழாவினை முன்னிட்டு திருமுருகன் நாட்டியாலாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு பரதநாட்டிய கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு கோயில் தர்மகர்த்தா சுந்தரேசன் தலைமை வகித்தார். அமமுக உடன்குடி ஒன்றிய செயலாளர் அம்மன்நாராயணன், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரத நாட்டிய கலைஞர்களை பாராட்டி பட்டு சேலையை பரிசாக முன்னாள் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் மனோகரன் வழங்கினார். இதில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலமுருகன், நகர இளைஞரணிசெயலாளர் அப்துல்காதர், லயன்ஸ் முத்துபாண்டியன், ஒன்றிய ஓட்டுநர் அணி பொருளாளர் சுயம்புலிங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள், அமுமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : temple donor festival ,
× RELATED கோயில் கொடை விழாவையொட்டி வல்லநாட்டில் மாட்டு வண்டி போட்டி