×

மது விற்ற 3 பேர் கைது

புளியங்குடி, அக். 11: சேர்ந்தமரம் சப்இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வடநத்தம் பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த முருகேசன் (45), வேலப்பநாடானூரில் வீட்டில் மது விற்ற தங்கமணி (60) மற்றும் கரடிகுளம் பகுதியில் மது விற்பனை செய்த வேல் (65) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்