×

அம்பை நகராட்சியில் நாளை அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த சிறப்பு முகாம்

அம்பை, அக். 11:  அம்பை நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  அம்பை நகராட்சி பகுதியில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணையில் தெரிவித்துள்ள திட்டம் 2018 நவ.3ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அம்பை நகராட்சி பகுதியில் அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள தனிமனைகள் வாங்கிய அனைவரும் கிரைய பத்திரம் நகல் வில்லங்க சான்று வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்த நகலுடன் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் இத்திட்டம் தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் நாளை (12ம் தேதி)  நடைபெறும் சிறப்பு முகாமிலும் கலந்து கொண்டு பயனடையலாம்.

Tags : camp ,municipality ,Ambai ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு