×

வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி, அக்.12: கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணபுரம் பகுதியியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (60). நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டாமல் பஜாருக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. அறையில் இருந்த 2 செல்போன்கள் கொள்ளை போய் இருந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிப்காட் பகுதியை சேர்ந்த ஆந்திரா மாநிலம் குண்டுர் பகுதியை சேர்ந்த புஜா ரமேஷ் (27) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்