×

ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் பகுதிகளில் பைக் திருடிய வாலிபர் கைது

ஆவடி, அக். 12: அம்பத்தூர், பாடி காமராஜர் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (34). தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஜூலை மாதம் அதே பகுதியில் உள்ள பாக்கியத்தம்மன் நகரில் உள்ள நண்பரை பார்க்க பைக்கில் சென்றார். நண்பரை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவர் நிறுத்தி வைத்திருந்த பைக்  மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீசில் வீரமணிகண்டன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வசந்தன் வழக்குப்பதிந்து விசாரித்தார்.
இந்நிலையில் அம்பத்தூர் தொழிபேட்டை சாலை சர்ச் அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் பைக்குக்கு ஆவணம் எதுவும் இல்லை. எனவே அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் திருமங்கலம் என்விஎன் நகரை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், ஓட்டி வந்தது வீரமணிகண்டனின் பைக் என்பதும் தெரிந்தது. மேலும் ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் பகுதியில் 2 பைக்குகளை திருடியதையும் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : JJ Nagar ,Nolampur ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி