காஞ்சிபுரம், அக்.12: காஞ்சிபுரம் நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் 3 இடங்களில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அமைப்புச் செயலாளர்கள் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், எம்பி மரகதம் குமரவேல், எம்எல்ஏ பழனி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெய்பாலாஜி, காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஆர்.டி.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் கீரைமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பூத் பொறுப்பாளர்கள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பாசறை பொருளாளர் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோன்று ஏகம்பரநாதர் கோவில் சன்னதி தெருவில் வி.ஆர்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின், மாவட்ட துணைச் செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட மாணவரணி அணிச் செயலாளர் வள்ளிநாயகம், மாவட்ட இளைஞர் அணி எஸ்.எஸ்.ஆர்.சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.