சேலம், அக்.11: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த சின்னப்பம்பட்டி வணிச்சம்பட்டியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். கையில் காலிகுடங்களுடன் வந்த அவர்கள், திடீரென நாட்டாண்மை கழக கட்டிடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘‘தாரமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட துட்டம்பட்டி ஊராட்சியில், வணிச்சம்பட்டி காட்டுவளவு, சொட்டையன் காடு ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.