×

தஞ்சை எஸ்பியிடம் மனு பல்கலைக்கழக மானிய குழுவை கலைப்பது கண்டித்து மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 11:  பல்கலைக்கழக மானிய குழுவை கலைப்பதை கண்டித்து தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி எதிரே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் அபிஷேக் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் துர்காதேவி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் செந்தூர்நாதன் துவக்கி வைத்தார். பல்கலைக்கழக மானிய குழுவை கலைப்பதை கைவிட வேண்டும். கல்வியாண்டு துவங்கி மாதங்களாகியும் இதுவரை இலவச பஸ் பாஸ் வழங்காத தமிழக அரசை கண்டிப்பது. இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்திய மருத்துவக்குழுவை கலைத்து விட்டு மருத்துவ ஆணையத்தை உருவாக்கி மருத்துவ படிப்புக்கு நீட், எக்ஸ்சீட் போன்ற தேர்வுகளை கட்டாயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வக்குமார், மாவட்ட தலைவர் சக்திவேல், மாணவர் பெருமன்ற மாநில துணைத்தலைவர் முகில், பொருளாளர் சூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : student march ,Tanjore SPP ,Manu University Grants Group ,
× RELATED நெக்ஸ்ட் தேர்வு ரத்து உள்பட 5 அம்ச...