×

திருமண்டங்குடியில் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 10வது நாளாக உண்ணாவிரதம்

பாபநாசம், அக். 11: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 6 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதை கண்டித்து ஆலை முன் கடந்த 1ம் தேதி முதல் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10வது நாளாக உண்ணாவிரத  போராட்டம் நடந்தது. அமமுக சார்பில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் சாமுவேல், மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் கிருஷ்ணசாமி, பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர்கள் வடக்கு மகேந்திரன், தெற்கு பன்னீர் செல்வம், பாபநாசம் பேரூர் செயலாளர் பிரேம்நாத்பைரன், திவாகர், மாவட்ட பிரிவு நிர்வாகிகள் ஆனந்தி, ராஜீ, அன்வர் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

Tags : Sugar mill workers ,Thirunandankadu ,
× RELATED ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்