×

அரியலூரில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

அரியலூர், அக். 11:  அரியலூரில் மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டம் ராம.ஜெயவேல் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திருமானூர் கொள்ளிடம் மணல் குவாரி அமைப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். அரியலூரில் இருந்து மிக தொலைவில் உள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் இருந்து பொய்யூர், கீழப்பழுர், திருமானூர் வழியாக தஞ்சாவூருக்கு அரசு பேருந்துகள் இயக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அவைத்தலைவர் ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கவியரசன், மாவட்ட துணை செயலாளர் தெய்வசிகாமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேக்கப், ஜெயவேல், கலியமூர்த்தி, ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Dementia consultation ,Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...