×

தா.பழூரில் வாலிபர் சங்க மாநாடு பெண்கள் கூட்டமைப்பு கூட்டம்

பெரம்பலூர், அக்.11: பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள தனியார் கூட்டரங்கில் ஐடிஎப்சி நிறுவனம் சார்பில் பெண்கள் கூட்டமைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி சமூக நலத்துறை அமைப்பின் முதன்மைப் பொது மேலாளர் மேரிஅன்பரசி தலைமை வகித்தார். பெரம்பலூர் கிளை மேலாளர் பிரபு வரவேற்றார். சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரத்தினாம்பாள், மாவட்ட ஆட் கடத்தல் தடுப்புப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்புலெட்சுமி, மாலதி,

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பின் பெரம்பலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு, பெரம்பலூர் அட்லஸ் மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகேஷ்தங்கவேல், டாக்டர் ஸ்ரீவரமங்கை ஆகியோர் தங்கள் துறை சார்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினர். கிளைமேலாளர்கள் பெரம்பலூர் ராம்குமார், திருச்சி சசிக்குமார், சமூக நலத்து றையின் திருச்சி மண்டல மேலாளர் சந்துரு ஆகியோர் விளக்கவுரையாற்றினர். பெரம்பலூர் கிளை மையத்தலைவி மகேஸ்வரி அனுபவ பகிர்வு குறித்து பேசினார். முடிவில் பெரம்பலூர் கிளை கூடுதல் மேலாளர் சுரேந்திரன் நன்றி தெரிவித்தார்.

Tags : Women ,Confederation of Women Conference Conference ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...