×

வாரணவாசியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர், அக். 11:  அரியலூர் அருகே உள்ள கீழப்பழூர் போலீஸ் சரகம் சார்பில் வாரணவாசி கிராமத்தில் சமுதாய பணியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ், பயிற்சித்துறை துணை கண்காணிப்பாளர் மேகலா முன்னிலை வகித்தனர். கீழப்பழூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா வரவேற்றார். எஸ்பி அபினவ்குமார் தலைமை வகித்து ேபசும்போது, பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெண்கள்,

சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பெண் குழந்தைகள் ஏதாவது சொன்னால் பெற்றோர் அலட்சியப்படுத்தக்கூடாது. வரதட்சணை கொடுமை இருந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். சாலை விதிகள், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும். போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். கீழப்பழூர் போலீஸ் உதவி ஆய்வாளர் ஜோதி நன்றி கூறினார்.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...