×

வணிகவரி துறையினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 11: தமிழ்நாடு வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாக கொண்டு, நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு, அனைத்து நிலைகளிலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பதவி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அலுவலர்களுக்கான தடையில்லா சான்றில் இருந்து, தணிக்கை குறிப்பு சான்றினை நீக்க வேண்டும். பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி