×

திருவண்ணாமலை அருகே பெண் உட்பட 4 பேர் கைது

திருவண்ணாமலை, அக்.11: திருவண்ணாமலை அருகே போலி ஆவணம் தயாரித்து 77 சென்ட் நிலத்தை அபகரித்ததாக பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம், விவசாயி. இவருக்கு அதே பகுதியில் 77 சென்ட் நிலம் உள்ளது. இவரது தங்கை மலர். இவரது கணவர் மோகன். இருவரும் ஆரணி அருகே உள்ள ஒகையூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாலசுந்தரத்துக்கு சொந்தமான 77 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 7.12.15ம் தேதி ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மலரின் பெயரில் மோகன் பதிவு செய்துள்ளார். இதற்கு மலரின் உறவினர்கள் நேத்தப்பாக்கத்தை சேர்ந்த சிசுபாலன், சித்தேரியை சேர்ந்த பன்னீர்செல்வம், செய்யாறை சேர்ந்த எழுத்தர் ராமமூர்த்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 20.6.2016ம் தேதி மலர், ஆரணி பழைய போலீஸ் ஸ்டேஷன் ெதருவை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பாலசுந்தரம் இதுகுறித்து கடந்த 19.2.18ம் தேதி திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். இதற்கிடையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மோகன் இறந்துவிட்டார். இந்நிலையில் எஸ்பி சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை நில அபகரிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடகிருஷ்ணன் வழக்குபதிந்து மலர், சிசுபாலன், பன்னீர்செல்வம், ராமமூர்த்தி ஆகியோரை கைது செய்தார்.

Tags : women ,Tiruvannamalai ,
× RELATED ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத...