×

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் 10 நாள் நவராத்திரி விழா துவங்கியது

ஆற்காடு, அக். 11: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள விஜய துர்க்கையம்மன் கோயிலில் 23ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. இந்த விழா வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. விஜய துர்க்கை அம்மனுக்கு தினமும் காலை 7 மணிக்கு அபிஷேகமும், 8.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. அதேபோல் வாராஹி அம்மனுக்கு காலை 10 மணிக்கு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.

நேற்று காலை 7 மணிக்கு விஜய துர்க்கை அம்மனுக்கும் வாராஹி அம்மனுக்கம் அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. நவராத்திரி முன்னிட்டு கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், செயல்அலுவலர் மு.சிவஞானம் செய்திருந்தனர்.

Tags : festival ,Navratri ,Rathinagiri Palamurugan ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!