×

அருங்கால் கிராமத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து 2 பெண்கள் காயம்

அரியலூர்,அக்.9: அரியலூர் மாவட்டம், கல்லக்குடி அருங்கால் கிராமத்தில் தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்பு சுரங்கம் அமைந்துள்ளது.
இதிலிருந்து சுண்ணாம்பு கற்கள் டிப்பர் லாரிகளின் மூலம் சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்வார்கள், இந்நிலையில் அருங்கால் கிராமத்தில் மழையில் காரணமாக சாலைகள்  சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சுண்ணாம்பு ஏற்ற வந்த லாரியில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் போகும் வழியில் இறங்கி கொள்கிறோம் என்று கூறி லாரியில் ஏறியுள்ளனர். இந்நிலையில் கல்லக்குடி பகுதியில் சாலைகள் சேதமடைந்து சேறும் சகதியாக உள்ளதால்  வேகமாக வந்த டிப்பர் லாரி கட்டுபாடு இன்றி கவிழ்ந்து விட்டது. இந்நிலையில் லாரியிலிருந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகிய மூவரில் இரண்டு பெண்களுக்கு மட்டும் காயம் அடைந்து கீழப்பழூவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து விபத்து பற்றி கீழப்பழூர்  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : village ,lorry village ,women ,Tipper ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...