×

அரியலூர் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.43.55 லட்சம் கடன் உதவி

அரியலூர்,அக். 9: அரியலூர் நகர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கடன்  உதவி வழங்கும் விழாவில் ரூ.43.55 லட்சம் கடன் உதவிகளை அரசு கொறடா  தாமரை.எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்.இவ்விழாவிற்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டுறவு துறை சார்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவை அரசு கொறடா  தாமரை.எஸ்.ராஜேந்திரன்  துவக்கி வைத்து மகளிர் சுயஉதவி குழு, மாற்றுத்திறனாளிகள் கடன், தனிநபர் கடன், அடமான கடன், சிறு தொழில் தொடங்க தொழில் கடன், வீடு கட்ட கடன் உள்ளிட்டவைகளுக்கு சுமார் ரூ.43 லட்ச கடன் உதவிகளை  பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல  இணைப்பதிவாளர் பழனிவேல், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வராஜ், வங்கி துணை தலைவர் பழனியாண்டி, வங்கி மேலாளர்கள் சுமதி, கந்தசாமி  உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur ,city cooperative bank ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...