×

வீட்டில் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை மாயம்


திருப்பூர், அக்.5: ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் பேபிராணி பட்டாயத். இவர், திருப்பூர் மங்கலம் ரோடு கருவம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பனியன் தொழிலாளியான இவருக்கு ஒன்றரை வயதில் உதயநாராயணன் பட்டாயத் என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில், பேபிராணி பட்டாயத் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி, மகன் வீட்டில் இருந்துள்ளனர். மாலை 6 மணிக்கு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மகன் உதயநாராயணன் பட்டாயத்தை காணவில்லை என மத்திய போலீசில் குழந்தையின் தாய் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ